Last Updated : 09 Jan, 2017 02:52 PM

 

Published : 09 Jan 2017 02:52 PM
Last Updated : 09 Jan 2017 02:52 PM

பதவி பறிபோன சில பிசிசிஐ அதிகாரிகள் வதந்திகளை பரப்பியிருக்கலாம்: ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்

பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கும் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியை நாங்கள்தான் நடத்தப்போகிறோம் என்று ஹைதராபாத் கிரிக்கெட் சங்க செயலர் கே.ஜான் மனோஜ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நேற்று, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை நிதிப்பற்றாக்குறை காரணமாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுத்து விட்டதாகவும் இதனால் பிசிசிஐ அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இச்செய்திகளை வதந்திகள் என்று மறுத்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்க செயலர் ஜான் மனோஜ் கூறும்போது, “ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஒருநாளும் டெஸ்ட் போட்டியை நடத்த முடியாது என்று மறுத்ததில்லை. விளையாட்டு மைதானத்தில் விளம்பரத்திற்காக டெண்டர் நோட்டீஸ் இன்று வெளியிடவிருக்கிறோம். டுவெண்டி பர்ஸ்ட் செஞ்சுரி மீடியாவுடன் இன்னும் ஓரிருநாட்களில் ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. யார் இந்தமாதிரி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.” என்றார் திட்டவட்டமாக.

நிதிப் பற்றாக்குறை பற்றி கூறிய செயலர் மனோஜ், “எந்த ஒரு கிரிக்கெட் சங்கமும் பணம் வேண்டுமெனில் உச்ச நீதிமன்ற அனுமதி பெற வேண்டும், அனைவருக்கும் அந்த வகையில் அனுமதி வழங்கப்பட்டு நிதி வந்து கொண்டுதான் இருக்கிறது. டெஸ்ட் போட்டி நடைபெறாமல் நின்று போனதா? இல்லையே. டெஸ்ட் போட்டியை நடத்தப் போதுமான நிதியை திரட்டியுள்ளோம். இதனால் ஸ்டேடிய உரிமைகளிலிருந்து வருவாய் வரவே செய்யும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் வங்கதேசம் ஒருவாரம் முன்னதாகவே வர விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கும் போதிய பணம் வைத்துள்ளோம். எனவே உச்ச நீதிமன்றத்தினால் பதவிப்பறிக்கப்பட்ட சில முன்னாள் பிசிசிஐ அதிகாரிகள் இத்தகைய வதந்திகளைப் பரப்பியிருக்கலாம் என்று நம்புகிறேன். எனவே திட்டவட்டமாக கூறுகிறேன்: ஹைதராபாத் டெஸ்ட் போட்டி நடைபெறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x