Published : 21 Jul 2016 09:26 AM
Last Updated : 21 Jul 2016 09:26 AM

டொரான்டோ டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், நடால் விலகல்

கனடாவின் டொரன்டோ நகரில் வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. இதில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 2-ம் நிலைய வீரரும் நடப்பு சாம்பியனுமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்பதாக இருந்தது.

ஆனால் ஆன்டி முர்ரே இந்த தொடரில் இருந்து சில தினங்களுக்கு முன்பு விலகினார். இந்நிலையில் அவரை தொடர்ந்து பெடரர், நடால் ஆகியோரும் டொரான்டோ டென்னிஸ் போட்டி யில் இருந்து விலகி உள்ளனர்.

2 முறை டொரான்டோவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெடரர் கடந்த ஆண்டும் இப் போட்டியில் கலந்து கொள்ள வில்லை. தற்போதும் கனடா ரசிகர் களின் முன்னிலையில் விளையாட முடியாமல் போனது, தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித் தார். பெடரர் சமீபத்தில் நடை பெற்ற விம்பிள்டன் போட்டியில் அரையிறுதியில் தோல்வியை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணமடைந்து ஒரு வாரத்துக்கு முன்புதான் பயிற்சியை தொடங்கி உள்ளதால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக நடால் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரெஞ்சு ஓபன் போட்டியில் காயம் காரண மாக பாதியிலேயே நடால் விலகி யிருந்தார்.

முன்னணி வீரர்கள் 3 பேர் விலகி உள்ளதால் ஜோகோவிச் இந்த போட்டியில் எளிதில் சாம்பி யன் பட்டம் வெல்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடை பெற்ற விம்பிள்டனில் போட்டியில் ஜோகோவிச் 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x