Published : 13 Nov 2014 07:20 PM
Last Updated : 13 Nov 2014 07:20 PM

இன்னும் 50 ஓவர்கள் கூட விளையாடியிருப்பேன்: ரோஹித் சர்மா

இரட்டைச் சத உலக சாதனை நாயகனான ரோஹித் சர்மா, இன்று தான் இன்னும் 50 ஓவர்களைக் கூட ஆடியிருப்பேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “அணியின் ஸ்கோர் என்னவென்பதில் கவனம் தேவை, அப்படித்தான் இன்னிங்ஸைக் கட்டமைக்க வேண்டும். நம் அணி எந்த நிலையில் உள்ளது என்பதை அவ்வப்போது அறிய வேண்டும்.

எவ்வளவு ஓவர்களில் எவ்வளவு ரன்கள் எடுத்துள்ளோம், எந்த பவுலருக்கு எத்தனை ஓவர்கள் மீதமுள்ளன, இவையனைத்தையும் சிந்தித்த படியேதான் இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். அதைத்தான் இன்று செய்தேன்.

சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஆடினாலும் நான் உண்மையில் களைப்படையவில்லை. இன்று பெரிய இன்னிங்ஸ் ஒன்றை ஆடவேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். 50 ரன்களை எடுத்த பிறகே இதனை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் என்று கருதினேன், ஏனெனில் இது ஒரு நல்ல பேட்டிங் பிட்ச். இந்த பிட்சில் 300-350 ரன்களைத் துரத்த முடியும், எனவேதான் கடைசி வரை நின்று பெரிய ஸ்கோரை எட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன்”

என்றார் இன்று 173 பந்துகளில் 264 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x