Published : 17 Sep 2013 10:54 AM
Last Updated : 17 Sep 2013 10:54 AM

சொந்த ஊரில் களம் காணும் தோனி

அதிரடிக்கு பெயர்போன இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புயல்வேக ஆட்டத்தை அவருடைய சொந்த ஊர் ரசிகர்கள் வரும் 21-ம் தேதி நேரில் காணவுள்ளனர்.

5-வது சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 21-ம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. அதில் ஒரு சில போட்டிகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறவுள்ளது.

22-ம் தேதி ராஞ்சியில் நடைபெறும் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x