Last Updated : 27 Sep, 2016 10:25 AM

 

Published : 27 Sep 2016 10:25 AM
Last Updated : 27 Sep 2016 10:25 AM

பகலிரவு டெஸ்ட் இப்போதைக்கு இல்லை

பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியா வில் இப்போதைக்கு நடத்தப்படாது என்று பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் கூறிய அவர், “பிங்க் நிற பந்துகளை கொண்டு விளையாடும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை இப்போதைக்கு இந்தியாவில் நடத்த வாய்ப்பு இல்லை. பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பரீட்சார்த்த முறையில் துலீப் கோப்பை கிரிக்கெட் உட்பட பல போட்டிகளை நடத்த திட்ட மிட்டுள்ளோம். அவை வெற்றிகர மாக நடத்தப்பட்ட பிறகே பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடக்கும். இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை மேலும் பிரபலப் படுத்த, சிறிய நகரங்களில் டெஸ்ட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள் ளோம்” என்றார்.

சச்சின் டெண்டுல்கரும் பிங்க் நிற பந்துகளில் ஆடும் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது நல்ல யோசனையல்ல என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x