Published : 30 Dec 2014 03:28 PM
Last Updated : 30 Dec 2014 03:28 PM

தோனியின் ஓய்வு முடிவை மதிக்கிறோம்: பிசிசிஐ

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு அறிவித்துள்ள மகேந்திர சிங் தோனியின் முடிவை மதிப்பதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்தார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"அனைத்து வடிவங்களிலும் விளையாடுவது கடினமாக இருக்கிறது என்ற காரணத்தினால், டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவரான தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அனைத்து வடிவங்களிலும் விளையாடுவது கடினமாக இருப்பதாகக் கூறி அவர் ஓய்வு அறிவித்திருந்தார். இவரது தலைமையில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 நிலையை எட்டியது.



உடனடியாக அவர் ஓய்வு அறிவித்ததை அடுத்து, அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார். அவரது இந்த முடிவை பிசிசிஐ மிகவும் மதிக்கிறது.

மேலும், தோனியின் பெரும் பங்களிப்புக்காகவும், இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் கொண்டு வந்து சேர்த்த புகழுக்காகவும் பிசிசிஐ நன்றி தெரிவித்துக் கொள்கிறது. சிட்னி டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக பணியாற்றுவார்" என்று பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x