Published : 26 Nov 2014 10:42 AM
Last Updated : 26 Nov 2014 10:42 AM

பல்கலை. கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் ஹிந்துஸ்தான், எஸ்.ஆர்.எம்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தென் மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி திருச்சி ஜெ.ஜெ. கல்லூரியில் நேற்று 9-வது நாளாக நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மங்கள கங்கோத்ரி மங்களூர் பல்கலைக்கழக அணி 33.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக அணி 34.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் முதலில் விளையாடிய சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 45 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய சென்னைப் பல்கலைக்கழக அணி 39.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு சுருண்டு தோல்வி கண்டது.

ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இடையிலான இறுதிப்போட்டியும், மூன்றாவது இடத்துக்கான போட்டியும் இன்று நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x