Published : 08 Mar 2014 11:00 AM
Last Updated : 08 Mar 2014 11:00 AM

கியாட்டோ சேலஞ்சர்: இறுதிச்சுற்றில் திவிஜ்-ராஜா ஜோடி

ஜப்பானின் கியாட்டோ நகரில் நடைபெற்று வரும் கியோட்டோ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண்-பூரவ் ராஜா ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்திய ஜோடி தங்களின் அரையிறுதியில் 7-6 (4), 7-5 என்ற நேர் செட்களில் ஜப்பானின் தோஷிடே மட்சூய்-தாய்லாந்தின் டனாய் உடோம்சோக் ஜோடியை தோற்கடித்தது.

இந்த சீசனில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய ஜோடி, தாய்லாந்தின் சஞ்சய் ரதிவதானா-நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை சந்திக்கிறது. போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரதிவதானா-வீனஸ் ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஷியென் இய்ன் பெங்-சங் ஹுயா யாங் ஜோடியை தோற்கடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x