பிசிசிஐ சீரமைப்பு: லோதா குழுவின் பக்காவான 12 பரிந்துரைகள்

பிசிசிஐ சீரமைப்பு: லோதா குழுவின் பக்காவான 12 பரிந்துரைகள்
Updated on
4 min read

பிசிசிஐ மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அறிக்கையை முன்னாள் தலைமை நீதிபதி லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இதில் கிரிக்கெட் போட்டிகளின் மீது பந்தயம் கட்டுவதை சட்டபூர்வமாக்கலாம் என்றும், ஆனால் சூதாட்டத்தில் வீர்ர்கள் ஈடுபடுவது குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

லோதா குழு

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடை பெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய முன் னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து பிசிசிஐ அமைப்பிலும், அதன் செயல்பாட்டிலும் செய்ய வேண் டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரைக் கும்படி லோதா குழுவுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்.எம்.லோதா தலைமையிலான இந்த குழுவில் அசோக் பான், ரவீந்திரன் ஆகிய ஓய்வு பெற்ற நீதிபதிகளும் இருந்தனர்.

159 பக்க அறிக்கை

லோதா தலைமையிலான குழு, பிசிசிஐயின் விதிகளை அலசி ஆராய்ந்தது. இதன் அடிப்படையில் பரிந்துரைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அடங்கிய 158 பக்க அறிக்கையை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது லோதா குழு. அறிக்கையை சமர்பித்த பிறகு லோதா அளித்த பேட்டி:

பிசிசிஐ சீர்திருத்தம் குறித்து பிஷன் பேடி, கபில் தேவ், சச்சின், டிராவிட், கும்பிளே போன்ற முன்னாள் கேப்டன்களிடம் ஆலோசனை பெறப்பட்டது. பிசிசிஐ தலைவர், செயலாளர் தவிர மற்ற அனைவரிடமும் ஆலோசனை நடத்தினோம். சுமார் 38 முறை நடைபெற்ற ஆலோசனைகளுக்கு பிறகு பிசிசிஐயில் செய்யவேண்டிய மறுசீரமைப்பு குறித்து எங்கள் பரிந்துரையில் வெளிப்படுத்தியுள்ளோம். அதன்படியே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1. மாநில கிரிக்கெட்டுக்கு ஒரு பிரதிநிதித்துவம் மட்டுமே

பிசிசிஐ-யில் தற்போது 30 முழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் சர்வீசஸ், ரயில்வேஸ் போன்ற அணிகளுக்கான அமைப்புகள் எதுவும் இல்லை. சிலர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதில்லை. சில மாநிலங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் 3, குஜராத்தில் 3 அமைப்புகள் உள்ளன. இதை தவிர்க்க வேண்டும். ஒரு மாநில கிரிக்கெட்டுக்கு ஒரு பிரதிநிதித்துவமே வழங்கப்பட வேண்டும்.

2. சட்டப்பூர்வ சூதாட்டம்

கிரிக்கெட் ஆட்டத்தில் ஊழலை ஒழிக்க, பந்தயம் கட்டுதலை சட்டபூர்வ மாக்குவது நல்லது. வீரர்கள், அதிகாரிகள் சூதாட்டப் பந்தயத்தில் ஈடுபடுவது குற்றமாகக் கருதப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட இணையதளங்கள் வழியாக பொதுமக்கள் சூதாட்டத்தில் ஈடுபட அனுமதிக்கவேண்டும்.

3. தகவல் அறியும் உரிமை

பிசிசிஐ செயல்பாடுகளில் வெளிப் படைத்தன்மை தேவை என்பதாலும், பொதுச்செயல்களில் அது ஈடுபடுவதாலும், அதன் செயல்பாடுகளை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. எனவே பிசிசிஐ-யை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர பரிசீலிக்க வேண்டும்.

3. பதவிக்காலம் குறைப்பு

பிசிசிஐ நிர்வாகிகளுக்கு 3 ஆண்டுகால பதவி மட்டுமே வழங்கப்பட வேண்டும். பிசிசிஐ தலைவர் பதவி வகிப்பவர்கள் 3 ஆண்டுகள் கொண்ட பதவிக்காலத்தில் 2 முறைக்கு மேல் பதவி வகிக்க கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற நிர்வாகிகள் 3 ஆண்டுகால பதவியில் 3 முறை இருக்கலாம்.

4. தலைமை செயல் அதிகாரி

பிசிசிஐக்கு தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். அவர் பிசிசிஐயின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்கவேண்டும். வீரர்களுக்கான சங்கம் தொடங்கப்படவேண்டும். பிசிசிஐயின் தேர்தல்களுக்கு தேர்தல் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்படவேண்டும்.

5. வயது வரம்பு

பிசிசிஐயின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் போன்றவர்களுக்கென சில விதிமுறைகள் விதிக்கப்படவேண்டும். 70 வயதுக்கு மிகாத இந்தியராக இருக்கவேண்டும். அமைச்சராகவோ, அரசு அதிகாரியாகவோ இருக்கக்கூடாது. 3 வருடங்களுக்கு மேல் யாரும் ஒரு பதவியில் இருக்கக்கூடாது.

6. கூடுதல் வாக்குரிமை நீக்கம்

தற்போதைய விதிமுறைகளின் படி பிசிசிஐ தலைவருக்கு 3 வாக்குகள் உள்ளன. பிசிசிஐ-யின் நிரந்தர உறுப்பினராகவும் அல்லது வாக்கெடுப்பில் சமநிலை ஏற்படும் போது இவரது கூடுதல் வாக்கு அனுமதிக்கப்படுது சரியானதே. ஆனால் கூட்டத்தின் தலைவராக இருக்கும் கூடுதல் வாக்குரிமை நீக்கப்பட வேண்டும்.

7. உயர்மட்ட குழு

9 உறுப்பினர்கள் கொண்ட பிசிசிஐ-க்கு உயர்மட்ட கவுன்சில் அமைக்கப்பட வேண்டும். இந்த 9 உறுப்பினர்களில் 5 பேர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும், 2 பேர் வீரர்கள் சங்க பிரதிநிதிகளாக செயல்பட வேண் டும். ஒரு பெண்ணும் இதில் இடம்பெற வேண்டும். தலைமைச் செயல் அதிகாரியே பிசிசிஐ-யின் அன்றாட செயல்பாடுகளை நிர்வகிக்க வேண்டும்.

மேலும் தலைமைச்செயல் அதிகாரி யின் உதவிக்கு 6 மேலாளர்கள் நிய மிக்க வேண்டும். தலைமை செயல் அதிகாரியை கொண்ட இந்த குழுவினர் பிசிசிஐ-யின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

8. வீரர்கள் சங்கம்

வீரர்கள் சங்கமானது முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை தலைமையில் அமைக்கப்படும் வழிகாட் டும் குழுவால் உருவாக்கப்படும். இதில் முன்னாள் வீரர்கள் மொகீந்தர் அமர்நாத், அனில் கும்ளே மற்றும் வீராங்கனை டயானா எடுல்ஜி ஆகியோர் இடம்பெறுவர். முதல் தர கிரிக்கெட் விளையாடிய அனைவரும் வீரர்கள் சங்கத்தின் கீழ் வருவார்கள். அதாவது முதல்தர கிரிக்கெட்டில அடிய ஆடவர், மகளிர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் ஆகியோர் இந்த சங்கத்தில் இடம்பெற வேண்டும்.

இந்த சங்கத்துக்கு பிசிசிஐ பொருளா தார உதவி அளிக்க வேண்டும். இவர்கள் பணியாளர்களாக செயல்படாமல் வீரர் களின் கருத்துக்கள், தங்களது அனுபவங் கள் மற்றும் திறனை கொண்டு கிரிக்கெட் டின் முன்னேற்றத்துக்காக செயல்பட வேண்டும்.

9. ஐபிஎல் பரிந்துரைகள்

ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை அதனை நிர்வகிக்கும் தலைமை அமைப்பு ஆட்சிமன்றக் குழு என்ற அமைப்பாகும். இதில் 9 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இதில் செயலர், பொருளாளர் மற்றும் 2 உறுப்பினர்கள் முழுநேர உறுப்பினர்களால் நியமிக்கப்படுவார்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மீதமுள்ள 5 உறுப்பினர்களில் ஒருவர் வீரர்கள் சங்கப் பிரதிநிதியாக நியமிக்கப்பட வேண்டும். 2 பேர் அணி உரிமையாளர்களின் சார்பாக நியமிக்கப்படுவார்கள். ஒருவர் இந்திய தணிக்கைக் கட்டுப்பாட்டு அலுவலகத்திலிருந்து நியமிக்கப் படவேண்டும். ஐபிஎல் குறித்த அனைத்து முடிவுகளையும் ஆட்சிமன்றக் குழுவே எடுக்க வேண்டும். நிதி தொடர்பான முடிவுகளும் இதில் அடங்கும்.

ஆட்சி மன்றக் குழு பிசிசிஐ-யின் பொதுக்குழுவுக்கு கட்டுப்பட்டதே. எனவே வரம்புக்குட்பட்ட தன்னாட்சி, ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவுக்கு உண்டு. மேலும் பிசிசிஐ நிர்வாகக் குழுவில் இருப்பவர், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகியாகவும் இரட்டைப் பதவி வகிக்க முடியாது. மாநில கூட்டமைப்புகளுக்கு அளிக்கப்படும் நிதிகள் முறையாகக் கண்காணிக்கப்படும்.

10. மாநில கிரிக்கெட் சங்கம்...

மாநில கிரிக்கெட் சங்கத்தின் அமைப்பில் சீரான பரிந்துரையை செய்துள்ளோம். குறிப்பாக ஆயுள் முழுதும் மாநில சங்கங்களுக்கு அலுவலகம் கிடையாது, 9 ஆண்டுகளுக்கு மட்டுமே அலுவலகம் அனுமதிக்கப்பட வேண்டும். மாநில சங்கங்களில் கிரிக்கெட் மற்றும் சமூக நடவடிக்கைகள் பிரித்தறியப்பட வேண்டும். இவர்களது கணக்குகளை பிசிசிஐ தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

11. அரசியல்வாதிகள் கூடாது

இரட்டை ஆதாயம் தொடர்புடைய விவகாரங்களைக் கண்காணிக்க தனியாக அதிகாரி நியமிக்கப்படவேண்டும். அவர், உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருக்கவேண்டும். மாநில அமைப்புகளிலும் அரசியல்வாதிகள் இருக்கக்கூடாது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே அதில் இடம்பெற வேண்டும். போட்டிகள், சரியான சுழற்சி முறையில் மைதானங்களுக்கு ஒதுக்கப்படவேண்டும்.

12. சட்ட ஆணையர்

மேலும் குறைகளை தீர்த்து வைக்கும் விதமாக சட்ட ஆணையர் ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும். இவர் இரட்டை ஆதாய விவகாரங்களை தீர்த்து வைக்க வேண்டும். நடத்தை விதிமுறைகள், ஊழல், விதிமுறைகளை மீறும் மாநில கிரிக்கெட் வாரியங்கள் ஆகியவை பற்றி இவர் முடிவுகள் மேற்கொள்வார்.

இந்த ஆணையர், உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்க வேண்டும். அதே போல் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வைக் கண்காணிக்க தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு 2 வாரங்களுக்கு முன்பாக தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். பிசிசிஐ-யின் அனைத்து முடிவுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு முறையான விதத்தில் வெளிப்படைத் தன்மை பரமாரிக்கப்படுவது அவசியம்.

இவ்வாறு லோதா தெரிவித்தார்.

சுந்தர் ராமன்

லோதா குழுவின் அறிக்கையில், “ஐபிஎல் முன்னாள் சி.ஓ.ஓ. சுந்தர்ராமன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான போதுமான ஆதாரம் இல்லை. மேலும் சூதாட்டத்தரகரான தாராசிங் குறித்தும் அவருக்கு எதுவும் தெரியவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக முத்கல் கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில், சுந்தர் ராமன் பெயர் 12 இடத்தில் இடம் பெற்றிருந்தது. மேலும் சூதாட்டத்தரகர் 8 முறை சுந்தர் ராமனை தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in