Published : 18 Oct 2013 10:25 AM
Last Updated : 18 Oct 2013 10:25 AM

லண்டன் ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்.ஸ்ரீனிவாசன்

லண்டனில், நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) கூட்டத்தில், இந்தியா சார்பில் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன் கலந்து கொள்கிறார்.

என்.ஸ்ரீனிவாசன், பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு கலந்து கொள்ளும் முதல் ஐசிசி கூட்டம் இதுவாகும்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ட்வெண்டி-20 போட்டிகளுக்கு வங்கதேசம் எந்த அளவுக்கு ஆயத்தம் ஆகி இருக்கிறது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என ஐசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x