மே.இ.தீவுகளுக்குப் பதிலாக இலங்கை; 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது

மே.இ.தீவுகளுக்குப் பதிலாக இலங்கை; 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது
Updated on
1 min read

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியத் தொடரை பாதியிலேயே கைவிட்டதையடுத்து இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியச் செயலர் நிஷாந்தா ரணதுங்க இது குறித்துக் கூறும்போது, “கொள்கை அளவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது. 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறோம்.

டி20 கிரிக்கெட்டிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது, ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறோம்” என்றார்.

நவம்பர் 1 முதல் 15ஆம் தேதிக்குள் இந்தத் தொடர் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ பயணத் தேதி விவரங்களை இறுதி செய்த பிறகே இது குறித்து தெரியவரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in