Published : 28 Oct 2014 12:43 PM
Last Updated : 28 Oct 2014 12:43 PM

புதுச்சேரி மாநில இறகு பந்து போட்டி

மாநில இறகு பந்து போட்டியில் பொதுப்பிரிவில் திருமால்பிரியன், அருணா முதலிடம் பிடித்தனர். புதுச்சேரி மாநில இறகுப்பந்து சங்கத்தின் சார்பில் 33வது மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இந்திரா நகர், காவலர் சமுதாயக் கூடத்தில் நேற்று முன்தினம் நடை பெற்றது. புதுச்சேரி இறகுப்பந்து சங்கத்தலைவர் அரவிந்தன் வரவேற்றார். விழாவில் புதுவை முதல்வர் ரங்கசாமி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

10 வயதுக்கு உட்பட்டோர் சிறுவர் பிரிசில் தினேஷ், சிறுமிகள் பிரிவில் யுவ, 13 வயதுக்கு உட்பட்டோர் சிறுவர் பிரிவில் தர்ஷன், சிறுமியர் பிரிவில் கவிபிரியா, 15 வயது சிறுவர் பிரிவில் ஜெயபிரகாசம், சிறுமிகள் பிரிவில் கவிபிரியா, 17 வயது சிறுவர் பிரிவில் புதுச்சேரி பாலாஜி, சிறுமிகள் பிரிவில் நிவேதிதா, 19 வயதுக்குட்பட்டோர் சிறுவர் பிரிவில் சஞ்சய், சிறுமிகள் பிரிவில் நிவேதிதா ஆகியோர் முதல் பரிசை பெற்றனர்.

ஆண்கள் பொது பிரிவில் திருமால் பிரியன், பெண்கள் பொது பிரிவில் அருணா, 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் ராஜேஷ், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் பங்கஜ் குப்தா, 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் குமார் ஆகியோர் பரிசு பெற்றனர்.

தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற சஞ்சய், ஸ்ரீபாலாஜி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் அமைச்சர்தியாகராஜன், எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் பாலன், வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x