Published : 08 Jan 2017 11:41 AM
Last Updated : 08 Jan 2017 11:41 AM

பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டி: பட்டம் வென்ற சானியா நம்பர் ஒன் இடத்தை இழந்தார்

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் ஆண்டின் முதல் சீசனை வெற்றிகரமாக தொடங்கி உள்ளார். அமெரிக் காவின் பெத்தானி மேடக்குடன் இணைந்து விளையாடிய சானியா, பிரிஸ்பேன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடரின் இறுதி போட்டியில் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் கேத்ரினா மகரோவா, எலீனா வெஸ்னினா ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

சாம்பியன் பட்டம் வென்ற அதே வேளையில் உலகத் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் வகித்த முதலி டத்தை சானியா இழந்துள்ளார். 91 வாரங்கள் முதலிடத்தில் நீடித்த சானியா அந்த இடத்தை தனது இணையான பெத்தானி மேடக்கிடம் பறிகொடுத்துள்ளார்.

சானியா கூறும்போது, “மிஸ் வேர்ல்டு பட்டத்தை அடுத்த நபரிடம் ஒப்படைப்பது போன்று உணர்கிறேன். இறுதி போட்டி சிறப்பான முறையில் அமைந்தது. நடப்பு சாம்பியன் பட்டத்துடன் இந்த தொடரை சந்தித்தேன். என்னுடன் இணைந்து விளையாடியதற்காக பெத்தானி மேடக்குக்கு நன்றி தெரி வித்துக்கொள்கிறேன். இன்னும் நாங்கள் அதிக ஆட்டங்களில் இணைந்து விளையாட வேண்டும்.

நம்பர் ஒன் இடத்தில் இருந்த நான் அந்த இடத்தை பிடித்ததற் காக பெத்தானி மேடக்கை வாழ்த்து கிறேன். நான் அவருடன் இணைந்து விளையாடாவிட்டாலும் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பானதாக அமையும்’’ என்றார்.

-பிடிஐ

பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சா, பெத்தானி மேடக் ஜோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x