Last Updated : 25 Feb, 2017 10:15 AM

 

Published : 25 Feb 2017 10:15 AM
Last Updated : 25 Feb 2017 10:15 AM

துணை ஆட்சியர் ஆகிறார் பி.வி.சிந்து

ஆந்திர மாநில அரசு தனக்கு வழங்கிய துணை ஆட்சியர் வேலையை ஏற்க பிரபல பாட் மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஒப்புக்கொண்டுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.3 கோடி பரிசளித்த ஆந்திர அரசு குரூப்-1 பிரிவில் அவர் விரும்பும் வேலையை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித் தது.

அரசு வேலையை ஏற்றுக் கொள்ளுமாறு அவருக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்தி ருந்தது.இந்நிலையில் ஆந்திர அரசு அளிப்பதாக கூறியுள்ள குரூப் -1 பிரிவில் துணை ஆட்சியர் வேலையை ஏற்க சிந்து விரும்பு வதாக அவரது தாயார் விஜயா கூறியுள்ளார். சிந்து தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x