சென்னை ஓபன்: லோபஸ் பங்கேற்கிறார்

சென்னை ஓபன்: லோபஸ் பங்கேற்கிறார்
Updated on
1 min read

அடுத்த ஆண்டு ஜனவரி 5 முதல் 11 வரை நடைபெறவுள்ள 20-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதை உலகின் 14-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸ் உறுதி செய்துள்ளார்.

தெற்காசிய மற்றும் இந்தியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபனில் லோபஸ் முதல்முறையாக பங்கேற்கவுள்ளார். கடந்த விம்பிள்டன் போட்டியில் 4-வது சுற்று வரை முன்னேறியவரான லோபஸ், அமெரிக்காவில் தொடர்ந்து 5 முறை 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதுதவிர ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான நடாலை தோற்கடித்துள்ளார். 1997-ம் ஆண்டு தொழில்முறை வீரராக உருவெடுத்த லோபஸ், இதுவரை 4 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். சென்னை ஓபனில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள லோபஸ், “2015-ம்

ஆண்டு சீசனை சிறப்பாக தொடங்குவதற்கு சென்னை ஓபன் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். இந்தப் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சென்னை நகரில் விளையாடுவதையும், அடுத்த சீசனை சிறப்பாக தொடங்குவதையும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in