Published : 25 Oct 2014 03:07 PM
Last Updated : 25 Oct 2014 03:07 PM

சேலஞ்சர் ஸ்குவாஷ் இன்று தொடக்கம்

ஜேஎஸ்டபிள்யூ-டபிள்யூஎஸ்ஏ சேலஞ்சர் சர்க்கியூட் ஸ்குவாஷ் போட்டியின் கடைசி சுற்று சென்னையில் இன்று தொடங்குகிறது. 29-ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இது தொடர்பாக இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளன பயிற்சியாளர் மேஜர் எஸ்.மணியம் உள்ளிட்டோர் கூறியதாவது:

சேலஞ்சர் சர்க்கியூட் போட்டியின் முந்தைய சுற்றுகள் ஜெய்ப்பூர் மற்றும் மும்பையில் நடைபெற்ற நிலையில் கடைசி சுற்று சென்னையில் நடைபெறுகிறது. மும்பையில் நடைபெற்ற 2-வது சுற்றில் பங்கேற்ற மகேஷ், சென்னை போட்டியில் பங்கேற்கவில்லை. ஹரிந்தர்பால், குஷ் குமார், செந்தில் குமார், ரவி தீட்சித் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள். மகளிர் பிரிவில் இந்திய அணிக்கு தீபிகா பலிக்கல் தலைமை தாங்குகிறார்.

இதுதவிர தேசிய அளவிலான சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் வரும் 27-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகின்றன. இதில் 18 மாநிலங்களைச் சேர்ந்த 540 பேர் பங்கேற்கிறார்கள். 11, 13, 15, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x