Published : 14 Oct 2014 11:24 AM
Last Updated : 14 Oct 2014 11:24 AM

மாநில வில்வித்தை தங்கம் வென்ற சேலம் மாணவன்

மாநில அளவில் நடந்த வில்வித்தை போட்டியில் சேலத்தை சேர்ந்த மாணவன் தங்கப் பதக்கம் வென்றார். இவர் ராஞ்சியில் நடக்கும் தேசிய போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் வனவாசியில் உள்ள ஈசா வித்யா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நாமக்கல்லில் நடந்த மாநில அளவிலான வில் வித்தை போட்டி யில் பங்கேற்றனர். பத்து வயது பிரிவில் நான்காம் வகுப்பை சேர்ந்த மாணவன் பெருமாள் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார். மூன்றாம் வகுப்பை சேர்ந்த மாணவன் தர்ஷன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன் வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். அதே வகுப்பை சேர்ந்த மாணவன் மேகாநந்தன் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் பெற்றார். முதல் இடம் பிடித்த கார்த்திகேயன் ராஞ்சியில் நடக்கும் தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்.

வில்வித்தையில் பதக்கம் வென்ற மாணவர்களை பள்ளி முதல்வர் அன்டுவான் கேப்ரியல், பள்ளி நிர்வாகி பரணி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x