Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

துபை டென்னிஸ்: செரீனாவுக்கு ஷாக்

துபையில் நடைபெற்று வரும் “துபை டியூட்டி ப்ரீ” டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் செரீனா 4-6, 4-6 என்ற நேர் செட்களில் 26-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் அலைஸ் கார்னட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

4-வது டபிள்யூடிஏ பட்டத்தை நோக்கி விளையாடி வரும் கார்னர்ட், முதல் செட்டின் 9-வது கேமில் செரீனாவின் சர்வீஸை முறியடித்து 10-வது கேமோடு முதல் செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் முதல் செட் 6-4 என்ற கணக்கில் கார்னட் வசமானது. பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் முதல் இரு கேம்களின் முடிவில் கார்னட் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற, பின்னர் கார்னட்டின் சர்வீஸை முறியடித்து சரிவிலிருந்து மீண்டார் செரீனா.

எனினும் 7-வது கேமில் செரீனாவின் சர்வீஸை முறியடித்த கார்னர், அந்த செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை வெற்றியில் முடித்தார்.

செரீனாவை முதல்முறையாக தோற்கடித்த கார்னட், இறுதிச்சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதும் வாய்ப்பை தகர்த்தார். ஏனெனில் மற்றொரு அரையிறுதியில் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் டென்மார்க்

கின் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.-ஏ.பி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x