Published : 07 Mar 2017 10:51 AM
Last Updated : 07 Mar 2017 10:51 AM

தொடரை வென்றது இங்கிலாந்து அணி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-0 என கைப்பற்றியது.

ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 47.5 ஓவர்களில் 225 ரன் களுக்கு அனைத்து விக்கெட்களை யும் இழந்தது. அதிகபட்சமாக ஜேசன் முகமது 50, கிரேய்க் பிராத் வெயிட் 42 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பிளங்கெட் 3, ஸ்டீவன் பின் 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

226 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரரான ஷேம் பில்லிங்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய், ஜோ ரூட்டுடன் இணைந்து சிறப்பாக விளை யாடினார்.

அரை சதம் அடித்த ஜேசன் ராய் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் இங்கிலாந்து 108 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. ஆனால் அடுத்த 16 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்களை பறிகொடுத்தது. மோர்கன் 7, பென் ஸ்டோக்ஸ் 1, பட்லர் 0, மொயின் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

124 ரன்களுக்கு 6 விக்கெட் களை இழந்த நிலையில் ஜோ ரூட்டுடன் இணைந்த கிறிஸ் வோக்ஸ் நேர்த்தியாக விளை யடினார். இந்த ஜோடியின் சிறப் பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் மேற் கொண்டு விக்கெட்களை இழக் காமல் இலக்கை அடைந்தது.

ஜோ ரூட் 127 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 90 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 83 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக் காமல் இருந்தனர். ஆட்ட நாயகனான ஜோ ரூட் தேர்வானார்.

4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி ஒருநாள் போட்டி வரும் 9-ம் தேதி பிரிட்ஜ்டவுனில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x