Published : 28 Jul 2016 08:51 AM
Last Updated : 28 Jul 2016 08:51 AM
ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவுக்கு பதில் மாற்று வீரராக ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் பிரவீன் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 74 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற நர்சிங் யாதவ் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு கட்ட பரிசோதனையிலும் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதி செய் யப்பட்டததால் இந்திய ஒலிம்பிக் சங்கம் நர்சிங் யாதவை சஸ் பெண்டு செய்து இருந்தது. இதனால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத நிலை உருவானது. இந்நிலையில் அவருக்குப் பதிலாக ரியோ ஒலிம்பிக் போட்டி யில் பங்கேற்க பிரவீன் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒலிம் பிக்கில் ஆடவர் 74 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க நர்சிங் யாதவ் தகுதிச்சுற்றின் மூலம் தேர்வாகியிருந்தார்.
ஆனால் தகுதிச்சுற்றில் பங்கேற்காதவரான சுஷில் குமார், தான் ஏற்கெனவே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்றிருப்பதால் 74 கிலோ எடைப் பிரிவில் தன்னையே ஒலிம்பிக்கிற்கு அனுப்ப வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். நீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தில் நர்சிங் யாதவுக்கே வெற்றி கிடைத்தது.
இந்த நிலையில் திடீரென நர்சிங் யாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப் பட்டது. இதன் பின்னணியில் சுஷில் குமார் இருக்கலாம் என்று ஆதாரமற்ற தகவல்களும் வெளியானது. ஆனால் இந்த குற்றச்சாட்டை சுஷில்குமாரின் பயிற்சியாளர் மறுத்தார். இந்த குற்றச்சாட்டை கூறுபவர்கள் அதற்குண்டான தகுந்த ஆதாரத் துடன் நிருபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த சூழ்நிலையில் தான் 74 கிலோ எடைப் பிரிவில் நர்சிங் யாதவுக்கான மாற்று வீரராக பிரவீன் ராணா ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். இதனால் சுஷில் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு பறிபோனது. மாற்று வீரரை உலக மல்யுத்த சங்கத்துக்கு பரிந்துரை செய்வதற்கான கடைசி நாளாக கடந்த 25-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந் தது. இதன்படி பிரவீன் ராணாவை இந்திய மல்யுத்த சங்கம் தேர்வு ஒப்புதலுக்கு அனுப்பியது. இதை ஏற்று பிரவீன் ராணா, ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள உலக மல் யுத்த சங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரவீன் ராணா கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்காவில் நடை பெற்ற சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT