Last Updated : 18 Oct, 2014 07:42 PM

 

Published : 18 Oct 2014 07:42 PM
Last Updated : 18 Oct 2014 07:42 PM

இஷாந்த் சர்மா காயமடையாமல் இருந்தால் அவர் ஒரு முக்கிய வீரர்: ஆலன் பார்டர்

2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வாய்ப்புகள் பலமாக உள்ளதாகக் கூறிய ஆலன் பார்டர், முழு உடல் தகுதியுடைய இஷாந்த் சர்மா அதில் முக்கியமான வீரர் என்று கூறியுள்ளார்.

புது டெல்லியில் இன்று நடைபெற்ற ‘ஆஜ் தக் சலாம் கிரிக்கெட்’ நிகழ்ச்சியில் ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளுக்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸி. முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், "காயமடையாமல் இருந்தால் இஷாந்த் சர்மா இந்தியாவுக்கு ஒரு முக்கியமான வீரர், அவர் ஒரு நல்ல பவுலர், ஆஸ்திரேலிய பிட்ச்களில் அவரால் சிறப்பாக வீச முடியும்” என்று கூறினார்.

இந்திய கேப்டன் தோனி பற்றி அவர் குறிப்பிடும்போது, “அவர் ஒரு பலமான ஆளுமை, ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் முனைப்புடன் ஒரு தலைவராக செயல்படுவது அவசியம்.

இந்திய அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர், இதனுடன் சரியான அணுகுமுறையைக் கையாண்டால், நிச்சயம் வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர்களால் சிறப்பாக விளையாட முடியும்” என்றார் பார்டர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x