Published : 21 Jun 2016 09:27 AM
Last Updated : 21 Jun 2016 09:27 AM
அஜர்பைஜானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதிச் சுற்று குத்துச்சண்டை போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் தேவேந்திர சிங் காலிறு திக்கு முன்னேறினார். நேற்று நடை பெற்ற ஆட்டத்தில் அவர் அர்ஜென்டி னாவின் லியன்ட்ரோவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். காலிறுதியில் தென் ஆப்ரிக்காவின் பன்ட்லாவை எதிர்கொள்கிறார் தேவேந்திர சிங்.
64 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மனோஜ் குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். மனோஜ் 2-வது சுற்றில் எகிப்தின் அகமது அலியை வீழ்த்தினார்.மனோஜ் குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பல்கேரி யாவின் ஐரின் ஸ்மிடோவை எதிர்த்து விளையாடுகிறார். இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினாலே மனோஜ் குமார் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT