Published : 25 Sep 2016 12:58 PM
Last Updated : 25 Sep 2016 12:58 PM
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடி பட்டம் வென்றது.
டோக்கியோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி இறுதிச் சுற்றில் தரவரிசையில் இடம் பெறாத சீனாவின் ஷென் லியாங், ஹவோ ஸூயன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் 2-வது இடத்தில் உள்ள சானியா ஜோடி 6-1, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றியை வசப்படுத்தியது. இந்த ஆட்டம் 51 நிமிடங்களில் முடிவடைந்தது.
3 தொடர்களில் ஸ்டிரைகோவா வுடன் இணைந்து விளையாடி உள்ள சானியா கைப்பற்றும் 2-வது கோப்பை இதுவாகும். கடந்த மாதம் சின்சினாட்டி ஓபன் தொடரிலும் இந்த ஜோடி கோப்பையை கைப்பற்றியிருந்தது. அமெரிக்க ஓபன் போட்டி கால் இறுதியில் தோல்வி கண்டிருந்தது.
வோஸ்னியாக்கி
ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ் னியாக்கி, 4-வது இடத்தில் உள்ள போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை எதிர்த்து விளை யாடினார். இதில் வோஸ்னியாக்கி 4-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் அவர், ஜப்பானின் நவோமி ஓஸாகாவுடன் பலப்ரீட்சை நடத்த உள்ளார். ஓஸாகா அரை இறுதி ஆட்டத்தில் 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலி னாவை தோற்கடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT