பயிற்சி ஆட்டத்தில் ஹோப் சதம்; மிஸ்ரா 4 விக்கெட்டுகள்: ஆட்டம் டிரா

பயிற்சி ஆட்டத்தில் ஹோப் சதம்; மிஸ்ரா 4 விக்கெட்டுகள்: ஆட்டம் டிரா
Updated on
1 min read

செயிண்ட் கிட்ஸில் நடைபெற்ற இந்திய-மே.இ.தீவுகள் வாரியத் தலைவர் அணிகளுக்கு இடையேயான 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்திய அணி முதல் நாள் ஆட்ட ரன் எண்ணிக்கையான 258/6 என்பதில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. தொடர்ந்து ஆடிய மே.இ,தீவுகள் வாரியத் தலைவர் அணியில் ஹோப் 118 ரன்களையும், சந்திரிகா 69 ரன்களையும் கடைசியில் வாரிகன் 50 ரன்களையும் எடுக்க அந்த அணி 281/7 என்று இந்திய அணியைக் காட்டிலும் முன்னிலை பெற்றது, 87 ஓவர்கள் முடிவில் ஆட்டம் டிரா ஆனது. இந்தியத் தரப்பில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அமித் மிஸ்ரா நடுக்கள வீரர்களை வீழ்த்தினார், 69 ரன்கள் எடுத்த சந்திரிகா ஸ்டம்ப்டு ஆனார். அடுத்த பந்தில் ஜெர்மைன் பிளாக்வுட் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 129/1 என்று இருந்த ஸ்கோர் 177/7 என்று ஆனது. சதம் அடித்த ஹோப், ஸ்பின்னர் வாரிகன் கூட்டணி 104 ரன்களைச் சேர்க்க ஆட்டம் டிரா ஆனது.

புவனேஷ் குமார், மொகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் இணைந்து 60 ஓவர்களை வீசி 205 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர். அமித் மிஸ்ரா 27 ஓவர்களில் 5 மெய்டன்களுடன் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதே மைதானத்தில் இதே அணியுடன் ஜூலை 14-ம் தேதி முதல் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in