Published : 18 Jul 2016 10:25 AM
Last Updated : 18 Jul 2016 10:25 AM
இந்திய அணிக்கும் மேற்கிந்திய கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணிக்கும் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கும் மேற்கிந்திய கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணிக்கும் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக் கெட் போட்டி செயின்ட் கீட்ஸ் நகரில் நடைபெற்றது. இதன் முதல் இன் னிங்ஸில் மேற்கிந்திய கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணி 180 ரன்களையும், இந்திய அணி 364 ரன்களையும் எடுத்தது.
இந்தியாவை விட முதல் இன் னிங்ஸில் 184 ரன்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்திய கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணி தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணி 70 ரன்களை எட்டுவதற்குள் கேம்பல் (31 ரன்கள்), ஜான்சன் (17 ரன்கள்), ஹோப் (17 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெறக்கூடிய நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு வந்த வீரர்கள் பொறுமையாக ஆடி, ஆட்டம் டிராவில் முடியச் செய்தனர்.
மேற்கிந்திய கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணியின் 2-வது இன்னிங்ஸில் பிளாக்வுட் அதிகபட்சமாக 51 ரன்களைக் குவித் தார். வி.ஏ.சிங், ஹாட்ஜ் ஆகியோர் தலா 39 ரன்களை எடுத்தனர். இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் சார்பில் அஸ்வின் மட்டுமே ஓரளவு சிறப்பாக பந்து வீசினார். 59 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT