Published : 27 Jan 2014 11:21 AM
Last Updated : 27 Jan 2014 11:21 AM

டி20: இந்தியா மகளிர் அணி வெற்றி

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் குவித்தது. இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமி, அமிதா சர்மா, சோனியா தபீர் ஆகியோர் அதிகபட்சமாக தலா 23 ரன்கள் எடுத்தனர்.

இலங்கைத் தரப்பில் பிரபோதனி 4 ஓவர்களில் 16 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இலங்கை அணியில் அதிகபட்சமாக ஜெயங்கனி 40 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்ரீவர்த்தனே 21, யசோதா மெண்டிஸ் 14 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x