Published : 01 Sep 2016 08:57 AM
Last Updated : 01 Sep 2016 08:57 AM
இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை தவிர்த்து ஏனையை விளையாட்டுகளை டி.வி.யில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று பரவலாக கருதப்படும் நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் வீராங் கனை பிவி சிந்து மோதிய இறுதிப்போட்டியை 1.72 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டு களித்தது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை போட்டியை ஒளிபரப்பிய ஸ்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் இல்லாத ஒரு போட்டியை எந்த ஒரு சானலிலும் இந்த அளவுக்கு இதுவரை ரசிகர்கள் பார்த்தது இல்லை என்று ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது. அதே போல் ஸ்டார் இந்தியா நிறுவனத் தின் டிஜிட்டல் தளமான ஹாட்ஸ் டாரில் 50 லட்சத்துக்கும் அதிக மானோர் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது 191 மில்லியன் பேர் தங்கள் சானலை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT