Published : 14 Jun 2017 04:37 PM
Last Updated : 14 Jun 2017 04:37 PM
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணி எந்த வித பதற்றமும் இல்லாமல் நிதானமாகவே வீரர்கள் உள்ளனர் என்று பயிற்சியாளர் ஹதுரசிங்கா தெரிவித்தார்.
2015 உலகக்கோப்பை காலிறுதியை அனைவரும் நினைவு படுத்துகின்றனர், அந்தத் தோல்விக்கு பழிவாங்கும் போட்டியெல்லாம் இல்லை. இந்தியாவுக்கு எதிராக நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆட வேண்டும். சவால் அளிக்க்த் திட்டமிட்டுள்ளோம் அவ்வளவே.
அணியின் உணர்வு நல்ல நிலையில் உள்ளது, நாங்கள் சாவதானமாக இருக்கிறோம். ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். தொடர் தொடங்கும் போது நான், இந்தத் தொடரில் அணி என்ன சாதிக்கிறதோ அது பெரியதாக இருக்கும் என்று கூறினேன், எனவே அரையிறுதிக்கு முன்னேறியது திருப்தி அளிக்கிறது.
அனைவருக்கும், பயிற்சியாளர்கள் உட்பட இதுதான் முதல் முறை, நாங்கள் எங்களை வெளிப்படுத்திக் கொள்வதே நோக்கம். இது பெரிய போட்டி அல்ல, எங்களுக்கு பெரிய வாய்ப்பு, எனவே மூத்த மற்றும் இளைய வீரர்களுக்கு எனது செய்தி என்னவெனில் இந்த வாய்ப்பை இருகைகளிலும் ஏந்திக்கொள்ளுங்கள் என்பதே.
அணிச்சேர்க்கை ஒரு மிகப்பெரிய சவால், எங்களிடம் போதுமான திறமை இருக்கிறது என்பது தெரியும், இளையோர் மூத்தோர் கொண்ட நல்ல அணிச்சேர்க்கை எங்களிடம் உள்ளது.
நாங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம், யார் எங்கள் எதிரணி என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் எங்களது திறமைகளை அதிகபட்சத்திற்குக் கொண்டு சென்று எங்களுக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கி கொள்வோம்.
நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இந்தியாவுக்கு எதிராக எங்களுக்கு யாரும் வாய்ப்பிருப்பதாக கருதவில்லை. இந்தியா சிறந்த அணி, ஆனால் அவர்களை வீழ்த்த முடியுமெனில் அது எங்களுக்கு ஒரு பெரிய சாதனையே.
இவ்வாறு கூறினார் வங்கதேச பயிற்சியாளர் ஹதுரசிங்கா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT