Published : 26 Oct 2013 12:06 PM
Last Updated : 26 Oct 2013 12:06 PM

இந்தியா-ஆஸ்திரேலியா 5-வது ஒரு நாள் போட்டி ரத்து

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெறுவதாகயிருந்த 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இப்போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுவதாக இருந்தது. அங்கு பலத்த மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மழை காரணமாக 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் ரத்து செய்யப்பட்டது. 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இது குறித்து ஒடிசா கிரிக்கெட் அகடமி செயளர் ஆசிர்பாத் பெஹெரா கூறுகையில்: பிட்ச் விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தாலும், வெளிப்புற மைதானம் ஈரமாக இருப்பதால் போட்டியை நடத்த முடியாது என அம்பயர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மிகுந்த வருத்தத்துடன் போட்டி ரத்து செய்யப்படுவதை அறிவிக்கிறேன் என்றார்.

டிக்கெட் கட்டணம் நவம்பர் 8 முதல் 15-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 10 மணி முதல் 5 மணி வரை திருப்பி அளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x