Last Updated : 03 Aug, 2016 09:02 AM

 

Published : 03 Aug 2016 09:02 AM
Last Updated : 03 Aug 2016 09:02 AM

லோதா கமிட்டி பரிந்துரைகள்: பிசிசிஐக்கு ஆலோசனை வழங்க புதிய குழு

லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த தங்களுக்கு ஆலோ சனை வழங்குவதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தலைமையில் ஒரு குழுவை பிசிசிஐ அமைத் துள்ளது.

ஐபிஎல் சூதாட்ட வழக்கின் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் குழு அமைக் கப்பட்டிருந்தது. இந்த குழு கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்தது. 70 வயதுக்கு மேல் கிரிக்கெட் வாரியப் பதவியில் இருக்கக்கூடாது, அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பிசிசிஐயில் பதவி வகிக்கக்கூடாது என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகள் இதில் இடம்பெற்றிருந்தன.

உச்ச நீதிமன்றத்தில் மனு

இதை எதிர்த்து பிசிசிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த மனு மீது தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை 6 மாதங்களுக்குள் அமல்படுத்துமாறு பிசிசிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிசிசிஐயின் நிர்வாகக் குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது.

பாலமாக செயல்படும்

இந்த கூட்டத்தில் லோதா கமிட்டி யின் பரிந்துரைகளை அமல்படுத்த பிசிசிஐக்கு ஆலோசனை வழங்கு வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தலைமையில் 4 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப் பட்டது. இந்த குழு லோதா கமிட்டிக்கும் கிரிக்கெட் வாரியத் துக்கும் இடையே பாலமாக செயல்பட்டு புதிய பரிந்துரைகளை அமல்படுத்த ஆலோசனை வழங்கும் என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “லோதா கமிட்டியின் பரிந்துரையில் உள்ள சில சட்ட நுணுக்கங்களை தெரிந்துகொள்ள ஒரு சட்ட வல்லுநரின் உதவி தேவைப்படுகிறது. மேலும் அவற்றை நிறைவேற்றுவதில் எங்களுக்குள்ள சில சிக்கல்களை சட்டரீதியாக எடுத்துக்கூறவும் ஒருவர் தேவைப்படுகிறார். எனவே இந்த குழுவுக்கு தலைமை தாங்குமாறு மார்கண்டேய கட்ஜூவை கேட்டுக்கொண்டுள் ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x