Last Updated : 22 Apr, 2017 09:44 AM

 

Published : 22 Apr 2017 09:44 AM
Last Updated : 22 Apr 2017 09:44 AM

இறுதிப் போட்டியில் வேலவன்

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் சென்னையை சேர்ந்த வேலவன் செந்தில் குமார் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன் னஸ்பர்க் நகரில் வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடை பெற்று வருகிறது. இதன் ஆடவர் பிரிவு அரை இறுதியில் வேலவன் செந்தில் குமார், 4-ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டிரிஸ் டன் ஐஸீலை எதிர்த்து விளையாடினார்.

இதில் வேலவன் 16-14, 15-13, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 19 வயதான வேலவன் கடந்த 10 நாட்களில் 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி யுள்ளார்.

கடந்த வாரம் அவர் பார்க்வியூ ஓபனிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x