Published : 11 Mar 2017 10:13 AM
Last Updated : 11 Mar 2017 10:13 AM
ஐபிஎல் 10-வது சீசன் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த முரளி விஜய் நீக்கப்பட்டு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பை சமூக வலைத்தளம் மூலம் பஞ்சாப் அணி நிர்வாகம் வெளியிட்டுள் ளது. பஞ்சாப் அணிக்கு கடந்த சீசனில் ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரும் அதன் பின்னர் முரளி விஜய்யும் கேப்டனாக செயல் பட்டனர்.
அணியில் மோர்கன், டேரன் சமி உள்ளிட்ட வீரர்கள் இருந்த போதும் அணி நிர்வாகம் கேப்ட னாக மேக்ஸ்வெலை தேர்ந்தெடுத் துள்ளது. கடந்த இரு சீசன்களிலும் அவர் 22 ஆட்டங்களில் 324 ரன்கள் சேர்த்தார். 2014-ல் பஞ்சாப் அணி இறுதி போட்டி வரை முன்னேறியதில் மேக்ஸ்வெல் முக்கிய பங்காற்றினார். இந்த தொடரில் அவர் 16 ஆட்டங்களில் 552 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT