Published : 12 Aug 2016 06:55 PM
Last Updated : 12 Aug 2016 06:55 PM

ஆடவர் வில்வித்தை: அதனு தாஸ் போராடி தோல்வி

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று ஆடவர் வில்வித்தை பிரிவில் இந்திய வீரர் அதனு தாஸ் தென் கொரிய வீரரிடம் போராடித் தோற்று காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

முதல் செட்டில் தனக்கான 3 வாய்ப்புகளிலும் 10 புள்ளிகள் இலக்கைத் தாக்கிய தென் கொரிய வீரர் லீ சியூங் யுன் 30-28 என்று வென்றார்.

ஆனால் 2-வது செட்டில் குறிதப்பாத மேற்கு வங்க வீரர் அதனு தாஸ் 3 வாய்ப்புகளிலும் 10 புள்ளிகளை தாக்கி 30-28 என்று சமன் செய்தார்.

அடுத்த செட்டில் 9 புள்ளிகள் எடுத்தால் செட்டைக் கைப்பற்றும் நிலையில் 8 புள்ளிகளில் அடித்து 27-27 என்று சமன் ஆனது. இப்போது 3-3 என்று இருவரும் டை செய்த நிலையில் அதனுதாஸ் வாய்ப்புகளின் மீது நம்பிக்கை இருந்தது.

4-வது செட்டிலும் அதனு தாஸுக்கு ஒரு இலக்கு தவறியதால் 27-28 என்று இழக்க நேரிட்டது. 5-வது செட்டிலும் அதனு தாஸ் போராடியே தோல்வியடைந்தார். அதிர்ஷ்டமும் தேவை, அது அதனு தாஸ் பக்கம் இல்லை. தென் கொரிய வீரர் 6-4 என்று வென்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x