Published : 03 Jan 2017 05:34 PM
Last Updated : 03 Jan 2017 05:34 PM
நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மறுத்ததையடுத்து பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவி நீக்கம் செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவிட்டது.
மேலும் பிசிசிஐ பணிகளை மேற்கொள்வதற்காக நிர்வாகிகள் குழு ஒன்றை அமைக்கவும், இதற்கு உதவுமாறு மூத்த வழக்கறிஞர்களான பாலி நாரிமன், கோபால் சுப்பிரமணியன் ஆகியோரை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பில் இருந்து பாலி நாரிமன் விலகுவதாக டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான நீதிமன்ற அமர்விடம் இன்று தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வாரியத்துக்காக கடந்த 2009-ல் சில வழக்குகளில் ஆஜராகி உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் நாரிமன் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நாரிமனுக்கு பதிலாக மூத்த வழக்கறிஞர் அனில் திவானை நியமித்துள்ளது. கோபால் சுப்பிரமணியத்துடன் இணைந்து பிசிசிஐ நிர்வாகிகள் குழுவை அமைக்க அனில் திவான் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT