Published : 31 Oct 2014 11:25 AM
Last Updated : 31 Oct 2014 11:25 AM

மாநில வாலிபால்: தஞ்சையில் தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) விளையாட்டு விடுதிகளுக்கு இடையிலான மாநில அளவிலான வாலிபால் மற்றும் பளுதூக்குதல் போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கின.

போட்டிகளை ஆட்சியர் என்.சுப்பையன் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் தஞ்சாவூர், திருநெல்வேலி, ஈரோடு, மதுரை, தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருச்சி மற்றும் சென்னை விளையாட்டு விடுதிகளைச் சேர்ந்த சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் அணிகள் பங்கேற்றுள்ளன.

முதல் நாளான நேற்று மாலை வரை நடைபெற்ற லீக் போட்டிகளில் சூப்பர் சீனியர் பிரிவில் திருநெல்வேலி அணி 25-22, 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் மதுரை அணியை வென்றது. கோவை அணி 25-17, 21-25, 25-21 என்ற கணக்கில் திருச்சியையும், மதுரை அணி 25-14, 25-13 என்ற கணக்கில் தஞ்சை அணியை யும் தோற்கடித்தன. திருநெல்வேலி அணி 25-14, 25-21, என்ற கணக்கில் திருச்சி அணியையும், கோவை அணி 25-16, 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் தஞ்சை அணியையும் வீழ்த்தின.

சீனியர் பிரிவில் தஞ்சை அணி 25-17, 22-25, 25-18 என்ற கணக்கில் கோவை அணியையும், திருநெல்வேலி அணி 25-14, 25-07 என்ற கணக்கில் மதுரை அணியையும், திருச்சி அணி 25-21, 25-15 என்ற புள்ளிக் கணக்கில் தஞ்சை அணியையும் தோற்கடித்தன. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள், மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறும். பளுதூக்கும் போட்டிகள் இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x