Published : 25 Nov 2013 01:47 PM
Last Updated : 25 Nov 2013 01:47 PM

கார்ல்சனுக்கு வெற்றிக் கோப்பை வழங்கினார் முதல்வர்

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகம் இணைந்து நடத்திய ஃபிடே உலக சதுரங்க வாகையர் போட்டி – 2013-ல் வெற்றி பெற்ற நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுக்கு ஆலிவ் இலை மாலையுடன் தங்கக் கோப்பையினையும், ரூ 9 கோடியே 90 லட்சம் காசோலையினையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

மேலும், இந்தப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு வெள்ளிப் பதாகையும், 40 சதவீத பரிசுத் தொகையான 6 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கினார். உலக சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் திரு கிர்சான் இல்யும் ஷினோவ், மேக்னஸ் கார்ல்சனுக்கு தங்கப் பதக்கமும், விஸ்வநாதன் ஆனந்துக்கு வெள்ளி பதக்கமும் வழங்கினார்.

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 7.11.2013 அன்று 2013-ஆம் ஆண்டிற்கான ஃபிடே உலக சதுரங்க வாகையர் போட்டியினை தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x