Published : 11 Jun 2016 09:39 AM
Last Updated : 11 Jun 2016 09:39 AM

ரியோ ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் அபிநவ் பிந்த்ரா

பிரேசிலில் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அணிவகுப் பில் துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா இந்திய தேசிய கொடியை ஏந்தி பங்கேற்பார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

அபிநவ் பிந்த்ரா 2000-ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதன்முறையாக தனது 17 வயதில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வரும் இவருக்கு ரியோ 5-வது ஒலிம்பிக் தொடர் ஆகும்.

2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 10 மீ்ட்டர் ‘ஏர் ரைபில்’ பிரிவில் தங்கம் வென்றார். இதன்மூலம் தனி ஒரு இந்திய நபர் வாங்கிய முதல் ஒலிம்பிக் பதக்கம் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x