Published : 10 Oct 2014 10:35 AM
Last Updated : 10 Oct 2014 10:35 AM

ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற 11 வீரர்களுக்கு ரூ.3.8 கோடி ரொக்கப் பரிசு: முதல்வர் அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற 11 தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளார். தங்கம் வென்ற 4 பேருக்கு தலா ரூ.50 லட்சமும், வெள்ளி வென்ற 4 பேருக்கு தலா ரூ.30 லட்சமும், வெண்கலம் வென்ற 3 பேருக்கு தலா ரூ.30 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியாக அவர் நேற்று அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தின் விவரம் வருமாறு:-

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை தாங்கள் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மகத்தான வெற்றிக்கு தமிழக மக்கள் சார்பில் எனது உளம்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ரொக்கப் பரிசு வென்றவர்களின் விவரம்

தங்கம்: ஸ்ரீஜேஷ், ஹரிந்தர் பால்சிங், குஷ்குமார் (மூவரும் ஹாக்கி), சவுரவ் கோஷல் (ஸ்குவாஷ்).

வெள்ளி: தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, அனகா அலங்காமணி, அபராஜிதா பாலமுருகன் (நால்வரும் ஸ்குவாஷ்).

வெண்கலம்: ஆரோக்கிய ராஜீவ் (400 மீட்டர் ஓட்டம்), ஐஸ்வர்யா நெடுஞ்செழியன், வர்ஷா கவுதம் (இருவரும் படகுப் போட்டி).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x