Published : 11 Jun 2016 01:04 PM
Last Updated : 11 Jun 2016 01:04 PM
ஹராரேயில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய சரண் அபாரமாக வீசினார். முதல் பந்திலேயே சிபாபாவுக்கு ஒரு இன்ஸ்விங்கரை வீச அது பிளம்ப் அவுட், ஆனால் நடுவர் ரசல் டிஃபின் அதனை அவுட் கொடுக்க மறுத்தார்.
ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் மற்றொரு தொடக்க வீரர் பி.ஜே.மூர் விக்கெட்டை எல்.பி.யில் வீழ்த்தினார் பரீந்தர் சரண். இந்தப் பந்தும் உள்ளே ஸ்விங் ஆனது, பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்ற மூர் கால்காப்பில் வாங்கினார். அவர் 3 ரன்களில் அவுட்.
தற்போது மசகாட்சா 2 ரன்களுடனும், சிபாபா 7 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ஜிம்பாப்வே 18/1 (7-வது ஓவர்)
இந்திய அணி: ராகுல், மணிஷ் பாண்டே, கருண் நாயர், அம்பாத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, அக்சர் படேல், தவல் குல்கர்னி, பும்ரா, பரீந்தர் சரண், சாஹல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT