Published : 01 May 2017 09:40 AM
Last Updated : 01 May 2017 09:40 AM
ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட் நகரில் போர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடை பெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டி யில் ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா, பிரான்ஸ் வீராங்கனையான கிறிஸ்டினா மெடெனோவிக்கை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை வென்ற ஷரபோவா, அடுத்த 2 செட்களையும் 5-7, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதன்மூலம் 6-3, 5-7, 4-6 என்ற செட்கணக்கில் தோல்வியைத் தழுவினார்.
ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடந்த 15 மாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் ஆடாமல் இருந்த ஷரபோவா, இந்த தொட ரில்தான் மீண்டும் ஆட வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT