Published : 09 Jun 2017 02:59 PM
Last Updated : 09 Jun 2017 02:59 PM

ஜடேஜாவுக்கே கடினம் எனும்போது யுவராஜுக்கு இன்னும் கஷ்டம் : விராட் கோலி

சாம்பியன்ஸ் டிராபி நேற்றைய போட்டியில் யுவராஜ் சிங்குக்கு பவுலிங் கொடுக்காமல் கேதர் ஜாதவ்வை பயன்படுத்தியது தொடர்பான கேள்விக்கு விராட் கோலி விளக்கமளித்தார்.

“அதாவது எதிரணி 4-5 விக்கெட்டுகளை இழந்திருந்தால், சில ஓவர்களை பகுதி நேர ஸ்பின்னர்களுக்குக் கொடுக்கலாம் என்ற நிலையில் யுவராஜ் சிறந்த தெரிவாக இருப்பார். ஆனால் அந்த நிலையில் நான் இதை யோசிக்கவில்லை, காரணம் மற்றொரு இடது கை ஸ்பின்னர் ஜடேஜாவின் ஓவர்களிலேயே ரன்கள் அதிகம் போனது என்றால் யுவராஜுக்கும் கடினமே. மேலும் குறைந்த தூர பவுண்டரிக்கு பந்துகள் விரைவில் செல்லுமாறு காற்று அடித்துக் கொண்டிருந்தது.

எனவே ஜடேஜாவுக்கே கடினமென்றால் யுவராஜுக்கு இன்னும் கடினமாக இருக்கும். நானும் ஜாதவ்வும் வீசுவது என்பது நன்கு திட்டமிடப்பட்ட ஒன்றே. நான் யோசித்தேன், தோனியிடமும் கலந்தாலோசித்தேன் கேதார் ஜாதவ்தான் அந்த சமயத்தில் சரியாக இருப்பார் என்று முடிவெடுத்தோம்.

இங்கிலாந்தில் சீம் பவுலிங் எடுபடும், எனவே நானும் முயற்சி செய்தால் என்ன என்று பந்து வீச முடிவெடுத்தேன்”

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x