காரைக்குடிக்கு 2-வது வெற்றி

காரைக்குடிக்கு 2-வது வெற்றி
Updated on
1 min read

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காரைக்குடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஜ்குமார் 46 ரன்கள் எடுத்தார்.

150 ரன்கள் இலக்குடன் விளையாடிய மதுரை அணி 16.1 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. காரைக்குடி அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் மதுரை அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வி கண்டது.

142 ரன் இலக்கு

தொடரின் 17-வது ஆட்டத்தில் நேற்று நத்தத்தில் திருவள்ளூர் வீரன்ஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 59 ரன் எடுத்தார்.

தூத்துக்குடி தரப்பில் பாலாஜி 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி அணி பேட் செய்ய தொடங்கியது.

இன்றைய ஆட்டம்

தொடரின் 18-வது ஆட்டத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நத்தத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in