Published : 22 Jan 2017 01:19 PM
Last Updated : 22 Jan 2017 01:19 PM
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
செஞ்சுரியனில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 10 ஓவர்களாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 126 ரன்கள் குவித்தது.
டேவிட் மில்லர் 18 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசினார். கேப்டன் பெகார்டின் 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் குலசேகரா 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து 127 ரன்கள் இலக்குடன் இலங்கை பேட் செய்தது. அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான டிக்வெலா 19 பந்துகளில், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் சேர்த்தார்.
தென் ஆப்பிரிக்க அணி
தரப்பில் லங்கி கிடி, இம்ரன் தகிர் தலா இரு விக்கெட்கள் கைப்பற்றினர். 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT