Published : 26 May 2017 04:27 PM
Last Updated : 26 May 2017 04:27 PM

ராகுல் திராவிட் என் மீது வைத்த நம்பிக்கையினால் உத்வேகம் பெற்றேன்: ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது திறமை மீது ராகுல் திராவிட் வைத்த நம்பிக்கையை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ராகுல் திராவிட் பற்றி கூறியதாவது:

ஒருநாள் போட்டிகளில் இருமுறை ஆட்டமிழந்ததை இன்னமும் நான் நினைவில் வைத்துள்ளேன். அப்போது ராகுல் திராவிட் என்னை அவரருகே வந்து அமருமாறு கூறுவார்.

பிறகு ‘ஹர்திக் இந்தியாவுக்கு ஆடக்கூடிய திறமை பெற்ற ஒருவீரர் நீங்கள். எனவே உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்ளவும் சூழ்நிலைகளை உங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவும் முயற்சி எடுக்க வேண்டும்’ என்றார்.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் நான் ரன் அவுட் ஆனேன். அப்போது 19 பந்துகளில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது இது எளிதான இலக்கே என்று நினைத்தேன். ஆனால் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றோம்.

அப்போது ராகுல் திராவிட் என்னிடம், ‘நீ போட்டிகளை வெற்றியுடன் நிறைவு செய்ய தொடங்க வேண்டும். இந்திய அணிக்காக உனக்கு இந்த ரோல்தான் காத்திருக்கிறது’ என்றார்.

எனவே ராகுல் திராவிட் என் மீது வைத்த நம்பிக்கைதான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கான என் தன்னம்பிக்கைக்கும் காரணம்.

இவ்வாறு அந்த நீண்ட பேட்டியில் கூறியுள்ளார் ஹர்திக் பாண்டியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x