Published : 01 Jun 2017 12:28 PM
Last Updated : 01 Jun 2017 12:28 PM
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ராமச்சந்திர குஹா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக, உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 30 அன்று, 4 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்தது. இதில் முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய், மகளிர் கிரிக்கெட் வீராங்கனை டயானா எடுல்ஜி, ஐடிஎஃப்சி நிறுவன தலைவர் விக்ரம், மற்றும் வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா ஆகியோர் இருந்தனர்.
தற்போது ராமச்சந்திர குஹா தனது பதவி விலகல் கடிதத்தை நிர்வாகக் குழுவின் தலைவரான வினோத் ராயிடம் அளித்துவிட்டதாக கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் குறிப்பிடுள்ளார்.
இது குறித்து பதிவுத் துறையில் மனு அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜூலை மாதம் இது விசாரிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT