Published : 17 Oct 2014 10:42 AM
Last Updated : 17 Oct 2014 10:42 AM
இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் நடைபெற்ற தென் மண்டல ஜூனியர் கோல்ஃப் போட்டியில் 15 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பாலமித்ரன் சாம்பியன் ஆனார்.
காஸ்மோ-டிஎன்ஜிஎஃப் கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 வகையான வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. தென்னிந்தியாவைச் சேர்ந்த 52 பேர் இதில் கலந்துகொண்டனர். இதில் 15 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பாலமித்ரன் முதலிடத்தையும், கணபதி 2-வது இடத்தையும் பிடித்தனர். 13 முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஆர்யன் ரூபா ஆனந்த் முதலிடத்தையும், சங்கீர்த் நிம்மா ரெட்டி 2-வது இடத்தையும் பிடித்தனர்.
11 முதல் 12 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் நவ்ஜாய் ஜெய்ஸ்வால் முதலிடத்தையும், சர்குன் சிங் 2-வது இடத்தையும் பிடித்தனர். 9 முதல் 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஆனன்ஜன் கவுஷிக் முதலிடத்தையும், விஷ்ணு ஆர்ய சுராஜ் 2-வது இடத்தையும் பிடித்தனர். 5 முதல் 8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ரேயன் அன்வர் முதலிடத்தையும், பிரவால் ரெட்டி 2-வது இடத்தையும் பிடித்தனர்.
மகளிர் பிரிவில் (5 முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவு) ரீபா அமோஸ், அனுஷ்கா போர்கர், விதாத்திரி அர்ஸ் ஆகியோர் சாம்பியன் ஆகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT