Last Updated : 13 Jan, 2017 11:21 AM

 

Published : 13 Jan 2017 11:21 AM
Last Updated : 13 Jan 2017 11:21 AM

மெஸ்ஸியின் அசத்தல் கோலால் கால் இறுதியில் நுழைந்தது பார்சிலோனா

ஸ்பானிஷ் கால்பந்து அணிகள் இடையிலான கோபா டெல் ரே தொடரில் அட்லெடிகோ பில்பாவோ அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா அணி கால் இறுதிக்கு முன்னேறியது.

முன்னதாக நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் நேற்று இரு அணிகளும் 2-வது கட்டமாக மோதின. 35-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரெஸ் கோல் அடிக்க முதல் பாதியில் பார்சிலோனா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

2-வது பாதி தொடங்கிய சிறிது நேரத்தில் பார்சிலோனா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்டுத்தி பிரபல வீரரான நெய்மர் கோல் அடிக்க பார்சிலோனா 2-0 என முன்னிலை பெற்றது. 51-வது நிமிடத்தில் அட்லெடிகோ வீரர் சபோரிட் தலையால் முட்டி தனது அணிக்கு முதல் கோலை அடித்தார்.

78-வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி ப்ரீகிக் மூலம் கோல் அடித்து அசத்தினார். இந்த கோல் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படாதால் பார்சிலோனா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கோல்கள் சராசரி விகிதப்படி 4-3 என்ற கோல் கணக் கில் வெற்றி பெற்ற பார்சி லோனா அணி கால் இறுதிக்கு முன்னேறியது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x