Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

ஐடிஎஃப்: 2-வது சுற்றில் ஜீவன், சனம் சிங்

பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ் செழியன், சனம் சிங் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நடை பெற்ற முதல் சுற்றில் ஜீவன் நெடுஞ்செழியன் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான அபிஜீத் திவாரியைத் தோற்கடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் முதல் கேமிலேயே தனது சர்வீஸை இழந்த ஜீவன், பின்னர் தொடர்ச்சியாக 4 கேம்களில் வென்று அந்த செட்டைக் கைப்பற்றினார்.

பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் ஒரு கட்டத்தில் இருவரும் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர். 7-வது கேமில் திவாரியின் சர்வீஸை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்ற ஜீவன், அதை நூலிழையில் தவறவிட்டார். இதன்பிறகு 9-வது கேமில் திவாரியின் சர்வீஸை தகர்த்த ஜீவன், 10-வது கேமோடு 2-வது செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த செட் 6-4 என்ற கணக்கில் ஜீவன் வசமானது. ஜீவன் தனது 2-வது சுற்றில் சகநாட்டவரான விஷ்ணுவர்தனை சந்திக்கிறார். விஷ்ணுவர்தன் தனது முதல் சுற்றில் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான மோஹித் மயூரைத் தோற்கடித்தார்.

சனம் சிங் வெற்றி

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சனம் சிங் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஜுய்-செங் ஹங்கை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் சனம் சிங் முதல் செட்டை எளிதாகக் கைப்பற்றியபோதும், 2-வது செட்டில் கடும் போராட்டத்துக்குப் பிறகே வெற்றி கண்டார். 2-வது செட்டில் 1-3 என்ற கணக்கில் பின்னிலையில் இருந்த ஜுய்-செங் திடீரென அபாரமாக ஆடினார். 2முறை சர்வீஸை இழப்பதிலிருந்து தப்பிய அவர், தொடர்ச்சியாக 3 கேம்களை தன்வசமாக்கி 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு 11-வது கேமில்

ஜுய்-செங்கின் சர்வீஸை முறியடித்து அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x