Last Updated : 05 Apr, 2017 04:48 PM

 

Published : 05 Apr 2017 04:48 PM
Last Updated : 05 Apr 2017 04:48 PM

மலேசிய ஓபன் பாட்மிண்டன்: சிந்து, சாய்னா முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி

இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனைகளான பிவி.சிந்து, மற்றும் சாய்னா நெவால் ஆகியோர் மலேசிய ஓபன் பாட்மிண்டன் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினர்.

ரியோ ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனையான பி.வி.சிந்து, தரவரிசையில்ல்லாத சீன வீராங்கனை சென் யுஃபெய் என்பவரிடம் 18-21, 21-19, 21-17 என்ற செட்களில் போராடி தோல்வியடைந்தார். கடந்த ஞாயிறன்று இந்தியா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து தரவரிசையில் இல்லாத வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதுவும் ஒரு மணி நேரம் 8 நிமிடங்களில் சிந்து தோல்வி அடைந்தார்.

மற்றொரு நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சி என்பவரிடம் 19-21, 21-13 21-15 என்ற செட்கணக்கில் தோல்வி தழுவி வெளியேறினார், யாமகுச்சி தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்திய ஆடவர் பிரிவில் அஜய் ஜெயராம் சீன வீரர் கியோ பின் என்பவரை நேர் செட்களில் வீழ்த்தி முதல் சுற்றை வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x