Published : 15 Mar 2014 11:14 AM
Last Updated : 15 Mar 2014 11:14 AM

ஐடிஎப் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் சனம் சிங்

சென்னையில் நடைபெற்று வரும் எம்.சி.சி.-எஸ்.ஆர்.சுப்பிரமணியம் நினைவு ஐடிஎப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சனம் சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சனம் சிங் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ஜீவன் நெடுஞ்செழியனை தோற்கடித்தார். இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் என்ரிக் லோபஸை சந்திக்கிறார் சனம் சிங். முன்னதாக லோபஸ் தனது அரையிறுதியில் 7-6 (6), 1-6, 6-2 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜியைத் தோற்கடித்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜீவன்-விஷ்ணுவர்தன் ஜோடி 7-6 (1), 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டு ஜோடியான பாலாஜி-விராலி முருகேசன் ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x